நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மத்திய அரசு ஒரு கிலோ அரிசி 29 ரூபாய் என்று பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு 5 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மக்கள் இன்று முதல் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரிசி விரைவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தலங்களிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.