தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 253 கோடி விடுவித்துள்ளது. டன்னுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,821.25 உடன் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 195 ரூபாய் வழங்கப்படும். அதாவது மொத்தம் டன்னுக்கு ரூ.3016.25 அளிக்கப்படும். இதன் மூலம் 1.42 லட்சம் கருப்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.