வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறு சீரமைக்கும் போது கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் என்பிஎப்சிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இஎம்ஐ மற்றும் தவணைக்காலம் இரண்டையும் தேர்வு செய்ய விருப்பம் இருக்க வேண்டும் எனவும் கடன் காலத்தில் கடன் தொகை அல்லது சில பகுதியை திருப்பி செலுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகன கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.