வங்காளதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும் சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான ஷஹாபுதீன் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்று ஏற்றுக்கொண்டது. மேலும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முகமது ஷஹாபுதீன் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து புதிய அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய அதிபர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.