இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன.

கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்டு, பின்னர் கோடை வெயில் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே  1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன.