தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் “லியோ”. இந்த படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் லியோ படப்பிடிப்பு இப்போது காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இதிலிருந்து திரிஷா வெளியேறியதாக கூறப்பட்டது.

எனினும் உண்மை காரணம் ஸ்டெண்ட் மாஸ்டர் பிஸியாக உள்ளதால் முதலில் அவர்களை வைத்து சண்டைக் காட்சிகளை முடிக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தான் திரிஷா நடிக்கும் காட்சிகள் எடுக்கவில்லையாம். ஆகவே தற்போது திரிஷா சென்னை வந்துள்ளார்.