லண்டனில் உள்ள ரயிலில் ஒரு நபர் மிகவும் சுத்தமான முறையில் சமோசாக்களை விற்பனை செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த நபர் பார்ப்பதற்கு பீகாரைச் சேர்ந்தவர் போலவும், ‘பீாரி சமோசா’ என்று கூறி விற்பனை செய்வதாலும் அவர் மீதான கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அவர் நேர்த்தியாகவும் சுகாதாரமாகவும் விற்பனை செய்த போதிலும், வெளிநாடுகளில் இதுபோன்ற முறைசாரா வியாபாரங்கள் (Street vending in trains) அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பானது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது.
இதனாலேயே, இந்தியர்களின் இத்தகைய செயல்கள் சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தைப் பாதிப்பதாக அந்தப் பதிவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக, இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விசா (Visa) பெறுவதில் ஏற்கனவே பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், இது போன்ற ‘சிவிக் சென்ஸ்’ (Civic sense) இல்லாத செயல்பாடுகள் உண்மையான விண்ணப்பதாரர்களையும் பாதிக்கும் என்று அந்தப் பதிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"Bihari sells samosa on a train in London."🤡
Indians already struggle with visa approvals in many countries, and clowns like him only create more problems. Zero civic sense.
Due to this kind of behaviour, even genuine applicants suffer. Total embarrassment. pic.twitter.com/eKR6ImCpVF
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) December 31, 2025
அவர் சுத்தமாக வியாபாரம் செய்தாலும், லண்டன் போன்ற நகரங்களில் ரயிலுக்குள் இதுபோன்று கூவி விற்பனை செய்வது விதிகளுக்கு எதிரானது என்பதால், இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்குவதாக அந்தப் பயனர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
