சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளியில், ஒரு பெண் தான் பயணம் செய்த டாக்ஸிக்கான கட்டணமான 250 ரூபாயைக் கொடுக்க மறுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். நியாயமாகக் கூலி கேட்ட ஓட்டுநரை மிரட்டும் தொனியில் அவர் பேசுவது, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘பெண்ணியம்’ மற்றும் ‘சுயாதீனம்’ பேசும் சிலர், இது போன்ற அடிப்படை நேர்மை இல்லாமல் நடப்பதுதான் வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
This feminist woman refused to pay the cab driver.
She even threatened him when he asked for his money.
An empowered feminist can’t even pay 250 rupees.
At this point, male drivers should refuse such women rides.
Why are feminist women so greedy? pic.twitter.com/lYoJej5bqH
— ︎ ︎venom (@venom1s) December 31, 2025
எளிய மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அதிகாரத் தோரணையில் மிரட்டுவதும் ஒரு நாகரிகமான சமூகத்திற்கு அழகல்ல. குறிப்பாக, இச்சம்பவம் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக, வரும் காலங்களில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவே ஓட்டுநர்கள் தயங்கும் சூழல் உருவாகலாம் என்றும், ஒருவரின் தவறான செயல் ஒட்டுமொத்தப் பெண்களின் பிம்பத்தையும் பாதிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
