குடும்பத்தோடு லண்டன் சென்றிருந்த ரோஹித் சர்மா இந்தியா திரும்பினார்..

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நாடு திரும்பினார். அவர் தனது மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைரா ஆகியோருடன் திங்கள்கிழமை (நேற்று) மும்பைக்கு வந்திறங்கினார். சொந்த மண்ணில் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான டீம் இந்தியா கடைசி வரை அபாரமாகப் போராடியது தெரிந்ததே.

லீக் சுற்றில் இருந்து அரையிறுதி வரை தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசி கட்டத்தில் வீழ்ந்தது. இந்திய அணி அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெறுங்கையுடன் திரும்பியது . மறுபுறம், ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்று கொண்டாடியது.

இதனால் கடும் ஏமாற்றமடைந்த ரோகித் சர்மா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்திய அணிக்கு உலகக் கோப்பையைக் கொடுத்த கபில்தேவ், மகேந்திர சிங் தோனிக்கு ஜோடியாக நிற்கும் கனவு தகர்க்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுதார். ரோஹித் மட்டுமின்றி கோலி,முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்களும் அழுதனர். அதுமட்டுமில்லாமல் இந்திய ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா விடுமுறை பயணமாக லண்டன் சென்றார் :

நவம்பர் 19ம் தேதி இறுதிப் போட்டி முடிந்து விடுப்பு எடுத்த ரோஹித் சர்மா, குடும்பத்துடன் விடுமுறைக்காக லண்டன் சென்றார். ரோஹித் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் கழித்த பிறகு திங்கள்கிழமை இந்தியா திரும்பினார். ரோஹித் தனது மனைவி ரித்திகாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதில் ரோஹித் சமைரா சர்மாவை மடியில் தூக்கிக்கொண்டு காரில் அமரவைக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  இதற்கிடையில், உலகக் கோப்பைக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டில் நடந்த டி20 தொடரில் இருந்து விலகியிருந்த ரோஹித், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் ஓய்வு எடுத்துள்ளார்.

அவர் இல்லாத பட்சத்தில், கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிகளிலும், சூர்யகுமார் யாதவ் டி20யிலும் இந்திய அணியை வழிநடத்துவார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மா அணியில் இணைவார். அதேபோல் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்குவார்.