திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது நிசாரிடம் அரிசி கேட்டுள்ளார்.

அதற்கு 100 கிலோ அரிசி மூட்டையை எலி தின்றுவிட்டது என அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். மேலும் ரேஷன் அட்டையையும் தூக்கி எறிந்துள்ளார். அப்போது அவர் கையில் பீர் பாட்டிலுடன் மது போதையில் பணியாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அதனை வீடியோ எடுத்து சசிகலா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.