ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதியுதவிகளும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி செயல்பட்டன.

அனைத்து நாட்களிலும், அனைத்து அட்டைதாரர்களுக்கும், அனைத்து பொருட்களையும் வழங்க உணவுத்துறை உத்தரவிட்டது. இதற்கு ஈடாக நவம்பர் 13, நவம்பர் 25 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை ( நவம்பர் 25) நியாய விலைக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.