பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை., உத்தரவிட்டுள்ளது. இதனால், பல கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.