தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணிபுரிந்து உயிரிழந்த ஆசிரியர்களுடைய குழந்தைகளுடைய தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கட்டண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தும் GO-வை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்/ ஓய்வுபெற்ற / பணிபுரிந்து உயிரிழந்த ஆசிரியர்களின் (தகுதியுள்ள) குழந்தைகளுக்கு பட்டப்படிப்புக்கு ரூ.10,000, டிப்ளமோவுக்கு ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிகிறது. தேசிய ஆசிரியர் நல நிதி வைப்பீட்டு தொகையின் வட்டியில் இருந்து வழங்கப்படுமாம்.