இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ரேஷன் கடை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலருக்கு வாழ்வாதாரமே ரேஷன் கார்டு தான். இந்த நிலையில் உங்களுடைய குடும்பத்திடம் ரேஷன் கார்டு இருந்தால் தற்போது உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜின் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.  இந்த திட்ட மூலம் ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்கும்.

அதாவது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆயுஷ்மான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலமாக 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதி கிடைக்கும். உங்களுடைய செல்போன் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். மேலும் இந்த பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்க வேண்டும். அதன் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் ரேஷன் கார்டு அல்லது தொழிலாளர் அட்டை கொண்டு பெயரை சேர்க்கலாம்.