தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் உதவி ஆணையர் அலுவலகங்களில் பிப்ரவரி 11ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் மக்கள் தங்கள் குறைகளை கூறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.