ஆந்திரா மாநிலம் கோதாவரி பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வீட்டில் தனித்துவமான முறையில் சேவல்கள் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சேவல்களை பார்த்து வியப்படைந்த தாய்லாந்து நாட்டினர் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆந்திரா வந்துள்ளனர். அதன் பிறகு சேவல் வளர்க்கும் ரத்தையா என்பவரை நேரில் சந்தித்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு பந்தய சேவலை வாங்கி அதனை தாய்லாந்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.