தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமையை பாராட்டி தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விருது பெற விருப்பமுள்ளவர்கள் இதற்கு முன்பு தமிழ் வளர்ச்சி துறை வழங்கிய எந்த விருதையும் பெற்றிருக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் தகுதியுடைய நபர்கள் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் விருதுக்கு தேர்வாகும் நபர்களுக்கு தமிழ் செம்மல் விருதுடன் 25 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.