தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரூ.12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதற்கான வரைபடம் ஏற்கனவே முதல்வர் பார்வைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், இன்னும் சிறப்பாக டிசைன் அமைக்க முதல்வர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் புலவர்களில் ஒருவரான ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம் என்றார்.