தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக இல்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது. ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை யாராலும் நிறுத்த முடியாது. அதற்கு நான் பொறுப்பு. உரிமை தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.