தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேலி செய்துள்ளார்.

திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்து வரும் அவர், அமலாக்கத்துறை கைதுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று மோடி உருட்டி இருக்கிறார். அதைக் கேட்டு பேட்டி எடுத்தவர்களே ஆடிப் போயிருக்கின்றனர். அந்தப் பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா அல்லது காமெடி டைமா என குழம்பிப் போய் உள்ளனர் என விமர்சித்துள்ளார்.