தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணியானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்களை நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்.

இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணியானது இன்று முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.