சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது  செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் தபால் அலுவலகம் மூலமாக இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக பெண்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. அதனால் பெண்கள் தபால் நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் இன்னும் இந்த உதவிகளை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே தபால் நிலையங்களில் பெண்கள் கூடுவது கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.