சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் 17 வயது சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டபோது தனது தம்பியுடன் சுருதி வீட்டில் படுத்து கொண்டு இருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்த தாய், மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததை பார்த்து கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

அதன் பிறகு இது குறித்து போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பொது தேர்வு வருவதால் செல்போனில் ரீல்ஸ் பார்க்காமல் படிக்கவும் என தாய் கூறியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.