ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று முதல் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நல்லவர்களின் நட்பு நன்மை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தை கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பண வரவு சீராக இருக்கும். பார்த்து பக்குவமாக இந்த நாளை கடந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு பொண் பொருள் சேரும் காலகட்டம் தான்.

ஆபரணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நகைகளை யாருக்கும் கடனாக கொடுக்க வேண்டாம். சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உதவி என்று கேட்பவர்களுக்கு இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்.

இந்த வழக்கு விவகாரங்களிலும் தலையிட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். பெண்கள் சந்திராஷ்டமும் முடியும் வரை பொறுமை காப்பது அவசியம். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். சக மாணவர்களை அனுசரித்து செல்லுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் மூன்று

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்