ரிஷப ராசி அன்பர்களே….

இன்று மனதிற்குள் ஏற்படும் கவலைகளுக்கெல்லாம் மருந்து கிடைக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி காரியங்களை அற்புதமாக செய்ய முடியும். மதிநுட்பத்தால் இன்று ரிஷப ராசிக்காரர்கள் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வெற்றி காணும் வழியை கண்டுபிடிப்பீர்கள் குடும்பத்தின் தேவையை கண்டிப்பாக பூர்த்தி செய்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் தாய் வழி ஆதரவு கிடைக்கும்.

இன்று தேவையற்ற பிரச்சனைகளில் மட்டும் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் ஏற்படும் கடன்கள் நோய்கள் ஓரளவு குறையும். செரிமானம் ஏற்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். நன்மை தீமை பற்றி கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள் முன்னேற்றம் காண்பதில் வேகம் இருக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் கூட்டுத்தொழில் லாபம் கண்டிப்பாக இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் ஏற்படும்.

இன்று பெண்கள்  அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு மன அழுத்தம் நீங்கிவிடும் நினைத்தது கை கூடும். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் முழு முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் தனித்து எதையும் செய்ய மாட்டீர்கள். சக நண்பர்களை மட்டும்அனுசரித்து   செல்ல வேண்டும். காலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் முழு அக்கறை தேவை

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது போல் இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள்.  நல்ல முன்னேற்றம் கிடைக்கப்பெறும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.