ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமமேஸ்வரம் கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படி, பக்தர்களின் வசதிக்காக முன்னோர்களுக்கு பரிகார புஜைகள் செய்ய கட்டண சீட்டுகள் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.