கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புறபுறவழுறவழிச் சாலையில் மேல்மருவத்துார் பக்தர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 20 பபக்தர்க்கள் நேறேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். அக்கரைப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சிவா (28) வேனை ஓட்டினார்.

தியாகதுருகம் புறவழிச் சாலையில் நள்ளிரவு 1:30 மணிக்கு வந்தபோது, புக்குளம் மேம்பாலம் அருகே எதிரே வந்த ஈச்சர் லாரி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.