பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்துக்கு வர உள்ள நிலையில் சென்னையில் 15.000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய ஈனுலை திட்டத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடக்க உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.