புதுச்சேரியில் கம்பன் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை, ராமாயணம் மகாபாரதத்தை கேட்டு கேட்டு மன உறுதி பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். ராமாயணத்தை படித்தால் தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

சமீப காலமாக நாடு முழுவதும் இளைஞர்கள் பலரும் வெவ்வேறு காரணத்திற்காக தற்கொலை முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் குறைவானதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு பேசியுள்ளார்.