உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜனவரி 22ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மது கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.