முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு இடையே கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ஓட்டுகள் பிரியும் வாய்ப்புள்ளதால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.