மேற்கு ஈராக்கில் உள்ள அல் ஹசாத் விமானத்தளத்தில் அமெரிக்க வீரர்கள் சிலர் தங்கி இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவம் கூறுகையில், அமெரிக்க படையின் தளத்தை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது. அதிக ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஏவுகணைகள் ராணுவ தளத்தின் மீது விழுந்து ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் ஈரான் ஆதரவு அமைப்புகளால் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.