சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.