ஆப்பிரிக்கா நாடான காங்கோ குடியரசு புதிதாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. தலைநகரான பிரேஸ்விலியில் வைத்து இந்த முகாம் நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரேஸ்விலி மைதானத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது அனைவரும் ஒன்றாக மைதானத்திற்குள் நுழைய முயற்சித்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்த நிலையில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.