ஆம் ஆத்மி எம் பி ராகத் சதா ராஜசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நான்கு எம்பிக்களின் கையெழுத்தை போலியாக போட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சபை உரிமை குழு இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை இடைநீக்கம் தொடரும் என்று சபை தெளிவுபடுத்தியது. மேலும் 4 ராஜ்யசபா எம்பிக்கள் அனுமதி இன்றி உத்தேச டெல்லி மசோதா குழுவில் சேர்க்கப்பட்டதாக புகார் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.