தமிழக அரசின் பேருந்துகளில் இருப்பதைப் போலவே PANIC BUTTON ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த பட்டனை பொருத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போவதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்காக கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கவும் கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது