மும்பையிலிருந்து சொந்த ஊருக்குப் போகும் வழியில், கோபால்தாஸ் என்ற ஏழை பயணியிடம் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் பார்ப்பவர்களையே ஆத்திரப்பட வைத்துள்ளது. தமன் தியூவில் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு, தனது பெற்றோரைப் பார்க்கச் சென்ற அந்தப் பயணியிடம், ரயிலைச் சுத்தம் செய்ய வந்த ஒருவன் கைவரிசையைக் காட்டியுள்ளான். போதாக்குறைக்கு ஆர்.ஏ.சி (RAC) சீட்டில் ஒரு ஆளே அமர முடியாத இடத்தில் கஷ்டப்பட்டுப் பயணம் செய்தவரிடமே இப்படித் திருடியது தான் கொடுமை.
चलती हुई ट्रेन में पैसा चोरी करते हुए पकड़ा गया चोर, यात्रियों ने कर दिया बढ़िया से इलाज। pic.twitter.com/gM4e8W2aLt
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) March 26, 2026
மாப்போ (Cleaner) பிடித்துக்கொண்டு வந்த அந்தத் திருடன், கோபால்தாஸின் பையில் இருந்த 2,500 ரூபாய் பணத்தையும், துணிகளையும் அபேஸ் செய்துள்ளான். பிடிபட்ட அந்த முபாரக் உசேனை, சக பயணிகள் அங்கேயே வைத்துப் புரட்டி எடுத்தனர். “கிளீனிங் பண்றவன் மாதிரியே வந்து இப்படி பண்றானே” எனப் பயணிகள் கொந்தளித்துவிட்டனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் ‘செம’ வைரலாகி வரும் நிலையில், “ரயிலில் பாதுகாப்பு எங்கே?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
