தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதி தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக விடுமுறை நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.