நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஒரு படத்தில் ரஜினியோடு நடித்திருந்தேன். அந்த படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது . அப்போது ரஜினிகாந்த் ஒரு முறை என்னிடம் சூட்டிங் முடிந்து என்ன பண்ணுவீங்க என்று கேட்டார். அதற்கு நான் ஒன்றும் செய்ய மாட்டேன் ரூமில் தனியாக இருப்பேன். சில நேரங்களில் மது அருந்துவேன் என்று கூறினேன்.

அதற்கு ரஜினிகாந்த் அப்படியா அப்போ ரெடியாக இருங்கள் கார் அனுப்புகிறேன் என்று சொன்னார். அதேபோல கார் வந்தது நான் ஏறி அவருடைய அறைக்கு போனேன். அவருடைய அறையில் நான் மது அருந்தி கொண்டே இரண்டு மணி நேரம் இருந்தோம். அந்த அறையில் வேறு யாருமே இல்லை. அதன் பிறகு அவர் என்னை ஒரு ஹோட்டலுக்கு கூட்டிப் போயிருந்தார். அங்கு சாப்பாடு வாங்கி கொடுத்து நான் நன்றாக சாப்பிட்டதும் அறையில் கொண்டு விட்டு விட்டு போய்விட்டார்.  ரஜினிகாந்த் ரொம்பவும் பண்பான மனிதர் என்று கூறியுள்ளார்.