தமிழ் சினிமாவின் மிக பிஸியான நடிகை திரிஷா, இவர் முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வருகிறார் . மேலும் தற்போது விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நிலையில் ஒருமுறை விருது விழாவில் நடிகை த்ரிஷா குறித்து முக்கிய நடிகர்கள் ஒருவரான ராணா பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த விருது விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் மிர்ச்சி சிவா, சென்னையில் உங்களுக்கு தெரியாத ஒரு ஏரியாவில் உங்களை கொண்டு போய் விட்டால் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுவீர்களா? என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு,  கண்டிப்பாக போய் விடுவேன். என்னை சென்னையில் எங்கு கொண்டு போய்விட்டாலும் ஒரே ஒரு நபர் வீட்டுக்கு தான் செல்வேன். அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான். ஆம் சென்னையில் எங்கு என்னை விட்டாலும் த்ரிஷாவின் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.