சந்தைகள் மற்றும் சாலைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்ட இருப்பதை எளிதில் அறிய சில டிப்ஸ் உங்களுக்காக. மாம்பழங்களை ஒரு வாலி தண்ணீரில் போட்டவுடன் மேலே மிதந்தால் அவை ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ளலாம்.

இயற்கையாக பழுத்தவை தண்ணீருக்கு அடியில் சென்று விடும். ரசாயனம் கலந்த மாம்பழங்களை வெட்டினால் அதிக சாறு வரும். பழங்களில் பெரும்பாலான இடங்களில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களாக இருக்கும். இதன் மூலமாக ரசாயனம் கலந்த மாம்பழங்களை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.