ஒடிசாவின் அங்குல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 7) ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது நுவாபாடா பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் மஹாபத்ரா என்ற மாற்றுத்திறனாளி, தனக்கு திருமணம் செய்து வைக்க இளம் பெண் ஒருவரை தேடித் தருமாறு கலெக்டரிடம் மனு அளித்தார். “என்னால் சரியாக நடக்க முடியாது.

என் பெற்றோர் வயதானவர்கள். என் வீட்டார் எவ்வளவோ முயன்றும் எனக்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஒரு இளம் பெண்ணைக் கண்டுபிடித்து கொடுங்கள்” என்று மனுவில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒரு மூன்று சக்கர வண்டி வழங்க வேண்டும் என்றும் சஞ்சீவ் மஹாபத்ரா கேட்டுக் கொண்டார்.