மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உயிருடன் இருக்கும்போது 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கி, பங்காரு அடிகளார் மகிழ்ச்சியடைவார். இதனால், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வருபவர் பட்டினியாக போகக் கூடாது என இட்லி, தோசை, பொங்கல் என அன்னதானம் வழங்கப்படுகிறது.