தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவாக, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணைய மோசடி வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றார். எந்த சூழ்நிலையிலும் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க முயற்சிக்காதீர்கள்.

மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக போலி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பண மோசடி குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.