கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்த பெண்களுக்கு காலை 8 மணி அளவில் மயக்க மருந்து கொடுத்து செவிலியர்கள் ஆபரேஷன் தியேட்டரில் படுக்க வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மதியம் 2 மணிக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்து முடிக்க வேண்டிய நிலை இருந்த நிலையில் குறித்த நேரத்திற்கு மருத்துவர் வரவில்லை.

காலை 9 மணிக்கு வந்த மருத்துவர் பாலகிருஷ்ணா செவிலியர்கள் அனைவரையும் வெளியே அனுப்பி  வைத்துள்ளார். நேரம் ஆனதால் சில பெண்களுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் உள்ளே சென்று பார்த்த போது மருத்துவர் பாலகிருஷ்ணா ஒரு படுக்கையில் மது போதையில் படுத்து தூங்கியது தெரியவந்தது. இதனால் அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவர் பாலகிருஷ்ணா மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் உறுதி கொடுத்த பிறகு அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.