விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. எண்ணெய் விலையை குறைக்க சமையல் எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய கூட்டத்தில் மத்திய அரசு இந்த ஆலோசனைகளை வழங்கியது.

சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப நாட்டில் விலையை குறைக்க உணவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் லிட்டருக்கு ரூ. 8-12 குறைக்கப்படும். பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.