மத்திய அரசு வழங்கும் திட்டத்தில் பிரதமர் மோடி படம் இல்லாவிட்டால் நிதி உதவியை நிறுத்துவோம் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பாக பேசிய அவர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படுகிறது.

இருந்தாலும் அவற்றை மாநில அரசுகளை மேற்கொள்வதாக மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். எனவே மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதி உதவி நிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்