மோடி கூறிய 400 தொகுதியில் தென்காசியும் உண்டு என தென்காசி தொகுதி பாஜக கூட்டணியின் தமமுக வேட்பாளர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மண்டபத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், பிரதமர் மோடி, அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் தென்காசி மக்களுக்கு தொண்டு செய்வதற்காக என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள். அரசியல் களத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றார்.