தமிழகத்தில் அமைச்சர் பொன்முடிக்கு பிறகு சொத்துப்பொறிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் திமுக அமைச்சர்கள் தங்கள் சொத்து நலன்களுக்காக நீண்ட காலமாக மோசடி செய்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கு தொடர்ந்தவர்களும் ஒரே அணிக்கு வந்து விடுகின்றனர். ஊழல்வாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். அது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெளிப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.