தமிழக அரசானது தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், மூடுவது என்பது சரியான போக்கு அல்ல. இது ஒரு தலைமுறையின் கல்வியை அழிக்கும் செயலாகும். எனவே, பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்வதே நல்லது